|
வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதத்திற்கு குரு வார விரதம் என்று பெயர். முக்கியமான விரதங்களில் இந்த விரதமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. குரு பகவானால் பாதிப்பு உள்ளவர்கள் இந்த குருவார விரதம் மேற்கொள்வது சிறப்பு. குருவார விரதம் இருக்கும் தினங்களில் ராகவேந்திரர் வழிபாடு செய்வதும் விசேஷமானது. இதனால் பலன் ரெட்டிப்பாகும்.
மஞ்சள் ஆடை:
குரு பகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் மஞ்சள். எனவே குரு தோஷத்தால் அவதிபட்டு வருபவர்கள் அந்த காலங்களில் மஞ்சள் நிற ஆடையை உடுத்தி வருவது நல்லது. குறைந்தபட்சம் மஞ்சள் நிற கைக்குட்டை போன்றவைகளையாவது தன் வசம் வைத்திருப்பது நல்லது.
மஞ்சள் நிற ஆடைகளை பிறருக்கு தானம் செய்வது குரு பகவானுக்கு உரிய பரிகாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் மஞ்சள் நிற ஆடை உடுத்துபவர்களுக்கு குரு அருள் நிரம்பக்கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
|