|
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் பிரகன் நாயகி சமேத சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்.
தல வரலாறு : திருமால் திருவீழிமிழலையில், தனது சிவபூஜையின் போது, அர்ச்சனைக்கான 1000 எண்ணிக்கையில் ஒரு பூ குறைந்த போது, தன் திருக்கண்ணையே ஒரு மலராக நினைத்து சிவனை பூஜித்து, சிவதரிசனம் பெற்றார். இதைக்கண்ட திருமகள் தானும் சிவதரிசனம் பெற விரும்பினாள். அகத்தியர் ஆலோசனையின்படி, இத்தலம் வந்து, இங்கிருந்த அக்னி தீர்த்தத்தில் தோன்றிய, 1000 தாமரை மலர்களால் சிவனை பூஜை செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தாõர். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார்.
உத்திரட்டாதி நட்சத்திர தலம்: அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களது நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு. இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.
பெயர்க்காரணம்: தீ அக்னிபகவான், அயன் சூரிய பகவான் இருவரும் இங்கு ஹோமம் செய்து சிவனை வழிபட்டதலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. விநாயகப்பபெருமானும், பிரம்மனும் தாங்கள் வளர்க்கும் ஹோமத்திற்காக இங்கிருந்து தான் அக்னியை பெற்று சென்றாக கூறப்படுகிறது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
பிரார்த்தனை : கடன் பிரச்னை தீர, செல்வம் செழிக்க, புத்திர பாக்கியம் கிடைக்க வழிபாடு செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன் : சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கோயில் அமைப்பு: அம்மன் பெரியநாயகிதெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நாகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. வாஞ்சா கணபதி தனி சன்னதியில் உள்ளார்.லட்சுமி பூஜை செய்த சிவன் என்பதால், இத்தலத்தை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.
இருப்பிடம் : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலிலிருந்து (21 கி.மீ) திருப்புனவாசல் செல்லும் வழியில் தீயத்தூர் உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 6 மதியம் 12 மணி .
போன் : 04371239 212, 99652 11768
|