Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :

மனிதராய் பிறந்த மணிகண்டனின் மகரஜோதி தரிசனம்!
கேரள ஐயப்பன் கோயில்கள் கேரளாவில் மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் பல ஐயப்பன் கோயில்கள் உள்ளன. சபரிமலை, அச்சன்கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, சாஸ்தாம் பேட்டை கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. தர்மசாஸ்தாவின் ஆஸ்ரமநிலைக்கு ஏற்ப இக்கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குளத்துப்புழையில் பாலனாகவும், ஆரியங்காவில் இளைஞராக புஷ்கலாவுடனும், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராகவும், சபரிமலையில் துறவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கேரளநாட்டை உருவாக்கிய பரசுராமர் இக்கோயில்களை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றொரு பழமையான சாஸ்தா கோயில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் உள்ளது. இங்கே சாஸ்தாவை காவல் தெய்வமாகக் கருதி சொரிமுத்து அய்யனார் என்ற பெயர் சூட்டி வழிபடுகின்றனர்.தமிழகப் பிரிவினைக்கு முன்பு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் எல்லைக்குள் இருந்த இக்கோயில் தற்போது தமிழகத்தில் உள்ளது. மீனாட்சி வழிபாடு குளத்துப்புழை ஐயப்பன் கோயில் கொல்லம் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்து உள்ளது. பாலகனாக இக்கோயிலில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இக்கோயிலில் மீனூட்டு என்னும் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். கோயில் குளத்தில் இருக்கும் மீன்களை ஐயப்பனின் நண்பர்களாகப் பக்தர்கள் கருதுகின்றனர். மீன்களுக்கு கோதுமை மற்றும் கடலையை உணவாக இடுகின்றனர். இதனால் இக் குளத்தில் யாரும் மீன் பிடிப்பதில்லை. இக்கோயிலுக்கு வந்த அனைவரும் தன்னை மறந்து குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா! என்ற சரணகோஷத்தை முழங்குகின்றனர். கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் சாஸ்தாம் கோட்டை என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள கோயிலில் ஐயப்பன் சிறுவனாக காட்சிதருகிறார். இங்கு குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றிற்கு உணவிடுவதை முக்கியமான வழிபாடாக மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தன் தவறு செய்தால் குருசாமிக்கு பங்குண்டு வழிபாட்டில் ஐயப்பனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ, அதே அளவுக்கு குருசாமிக்கும் முக்கியத்துவம் உண்டு. குருசுவாமிகளை முதன்முதலில் ஏற்படுத்திக் கொடுத்தவரே ஐயப்பன் தான். கொள்ளையனான உதயணனை கொன்றபின், சபரிமலைபிரதிஷ்டை தினத்தில் ஞானிகளைத்தேர்ந்தெடுத்து தலைவராக்கி குழுக்களை நியமித்தார். இவர்களே முதல் குருசாமியானார்கள். இவர்களதுஉத்தரவின்படி எல்லா பக்தர்களும் நடக்கவேண்டும் என்று ஐயப்பன் கட்டளையிட்டார். குருமாரை வசதி, புகழ் இவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. சபரிமலை யாத்திரை அனுபவம், தெய்வ பக்தி, தர்மசிந்தனை இவற்றின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தனர். அதுபோல, யாத்திரையின் போது எந்த பக்தர் பாவம் செய்தாலும் அதில் குருசாமிக்கும் பங்குண்டு என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. எனவே, விரத விதிகளை மீறும் பக்தர்களை குருசாமி கண்டித்து திருத்த உரிமையிருக்கிறது. சபரிமலையில் பிறதெய்வ வழிபாடு சபரிமலையில் உள்ள தெய்வங்களுக்கு தனித்தனியான பிரசாதமும், வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்டுகின்றன.மாளிகைப்புறத்தம்மனுக்கு கோயிலைச்சுற்றி தேங்காய் உருட்டுதல் சடங்கு நடக்கும். வெற்றிலை, மஞ்சள்பொடி, பட்டு, குங்குமத்தை இவளுக்கு காணிக்கையாகச் செலுத்தவேண்டும். விநாயகருக்கு தோப்புக்கரணமிட்டு நெய்த்தேங்காய் உடைத்து ஒரு பகுதியை அக்னி குண்டத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கடுத்தசுவாமிக்கு கதலி வாழைப்பழம், வறைப்பொடி, அவல், தேங்காய், சர்க்கரை, உலர்திராட்சை, கல்கண்டு சமர்ப்பித்து வழிபடவேண்டும். மலநடை பகவதிக்கு விளக்கேற்றி காணிக்கை செலுத்த வேண்டும். நாகராஜாவுக்கு கற்பூரம், மஞ்சள்பொடி சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம். வாவர் சுவாமிக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், ஊதுபத்தி, பன்னீர், நெய், தேங்காய் பிரசாதமாகப் படைக்க வேண்டும். ஐயப்பசுவாமிக்கு மிகவும் பிடித்தமான பிரசாதம்அரவணை. இதைக் கட்டிப் பாயாசம் என்பர்.உண்ணியப்பமும் பிடித்தமானதே. இது அரிசி மற்றும் வெல்லத்தால் செய்யப்படுகிறது. கற்பூரஜோதியையும், விழியில் விழுந்தது! உயிரில் கலந்தது! சூரியனின் சஞ்சாரத்தில் மகரராசிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தென்திசை பயணித்த சூரியன் வடதிசை நோக்கி பயணத்தைத் துவக்கும் தினத்தையே மகரசங்கராந்தி என்று கொண்டாடுகிறோம். ஐயப்ப தரிசனத்தில் இந்நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகத் திகழ்கிறது. மார்கழி மாதம், தைமாதத்திற்கு வழிவிட்டுக் கொடுக்கும் இந்நாளில், சபரிமலை யாத்திரை, மகரவிளக்கு ஜோதியோடு சுபநிறைவு பெறுகிறது. ஐயப்ப சந்நிதானத்தின் நேர் எதிரில் பொன்னம்பல மேட்டில் ஆகாயத்தை எட்டும் மலைச்சிகரங்களில் மகர ஜோதி தோன்றுகிறது. எங்கும் சரண கோஷங்கள் முழங்குகிறது. ஜோதியின் ஒளி, பக்தனின் விழியில் பட்ட அந்த கணத்திலேயே அருள்வெள்ளம் உள்ளத்திலும், உயிரிலும் கலக்கிறது. ஜோதி வடிவாக ஐயப்பனைக் காண விண்ணுலக தேவர்களும், தவம் செய்யும் முனிவர்களும் வருவதாக ஐதீகம். ஐயப்பன் வரலாறு: ஐயப்பனின் ஆயுதமாக இருப்பது வில். ஐயப்பனை வில்லாளி என்று நாட்டுப்புறப்பாடல்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. ஐயப்பன்பாட்டு, பொன்னம்பலப்பாடல், பந்தளசேவம், வாவரங்கம், குத்திசேவம், இடிவதரசேவம், புலிப்பால் சேவம், பாண்டிசேவம் என்று பலவிதமான நாட்டுப்புறப்பாடல்களின் ஐயப்பசுவாமியின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்திலும் ஐயப்பனை ஒரு மனிதனாகவே காணமுடிகிறது. கடவுளாக ஐயப்பனைப் போற்றும் பூதநாத புராணத்தில் இருந்து இந்நாட்டுப் புறப்பாடல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இந்நாட்டுப்புறப்பாடல்களில் ஐயப்பன் பந்தள நாட்டில் வாழ்ந்த வீரனாகச் சித்தரிக்கப்படுகிறார்.அவருக்கு உதவியாக வாவர், கடுத்தசுவாமி இருந்தனர். உதயணன் என்னும் கொள்ளையன் மற்றும் சோழமன்னர்களிடம் இருந்து பந்தளநாட்டு மக்களைக் காப் பாற்றினார் ஐயப்பன். இந்த வீரனையே தர்மசாஸ்தாவின் அவதாரமாக மக்கள் போற்றி வணங்குகின்றனர். காக்கும் கடவுள் விஷ்ணுவின் மாயாசக்திக்கும், அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையே சாஸ்தா. பிரம்மஞானம் என்னும் நூல், இக்கலியுகத்தில் தர்மத்தை நிலைநாட்ட வந்த அவதாரம் இது என்று குறிப்பிடுகிறது. கைம்மாறு கருதாமல் சேவை செய்து, உயிர்களைக் காப்பதை தன்னுடைய குறிக்கோளாக தர்மசாஸ்தா ஏற்று அமர்ந்திருக்கிறார். சைவசமயத்தின் முழுமுதற்பொருளான சிவமும், வைணவத்தின் முழுமுதல் பொருளான மகாவிஷ்ணுவும் இணைந்த அவதார என்பதால் ஐயப்பனை விட உயர்ந்த அவதாரம் உலகில் கிடையாது என்பர். ஐயப்ப வழிபாட்டில் மதபேதம் இல்லை சாமி திந்தக்கதோம் ஐயப்ப திந்தக்கதோம் என்னும் கோஷத்தோடு பாட்டு பாடி ஆடும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஐயப்பன் கோவிலில் தனிச்சிறப்பு மிக்கதாகும். ஐயப்பசுவாமி மகிஷி என்னும் அரக்கியைக் கொன்ற வெற்றியை அறிந்த எருமேலிவாசிகள் ஆடிய நடனமே பேட்டைத்துள்ளல். இந்த நிகழ்ச்சியை இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்வர். அப்போது, பல வண்ணப்பொடிகளை உடலெங்கும் பூசிக் கொள்வர். அம்பு, இலை, கம்புகளை ஏந்திக் கொண்டு கூட்டமாகச் செல்வர். மத ஒருமைப் பாட்டை நிலைநாட்டும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வாவர் மசூதிக்குச் சென்று காணிக்கை செலுத்தி வாவருக்கும், ஐயப்பனுக்கும் நன்றி செலுத்துகின்றனர். ஜாதிமத பேதம் அற்றவனே சரணம் ஐயப்பா என்னும் சரண கோஷத்துக்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் ஐயப்பன் கோயில் நடைதிறப்பது தெரியுமா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைகளுக்கு முந்தைய நாள், பக்தர்கள் இருப்பதில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நாளில் ஆயிரம் குடம் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கு சகஸ்ர கலசாபிஷேகம் என்று பெயர். ஒவ்வொரு மாதமும் இந்த அபிஷேகம் நடக்கும். இந்த பூஜையின் போது பலமுறை நடைதிறக்கவும், மூடவும் வேண்டி இருப்பதால் பக்தர்கள் வராத நாளை தேர்ந்தெடுத்து இந்த அபிஷேகத்தை நடத்துகிறார்கள். மதியவேளையில் இந்த அபிஷேகம் நடத்தப்படும். ஐயப்ப சுவாமியின் தெய்வீக அருளை அதிகப்படுத்துவதற்காக இவ்வாறு செய்கின்றனர். இந்த அபிஷேகம் நடத்த 3 மணி நேரமாகும். ஐயப்பனுக்கு எளிய உணவு: சபரிமலை தர்மசாஸ்தாவான ஐயப்பன் கோயில் நடை திறக்கும் நாட்களில் அவருக்கு செய்யப்படும் பூஜை, எளிய உணவு வகைகளைத் தெரிந்து கொள்வோமா! காலை 4மணிக்கு நடைதிறக்கப்பட்டதும், பிரதான புரோகிதரான தந்திரி முதலில் அபிஷேகம் செய்வார். பின்னர் கணபதிஹோமம் நடக்கும். கணபதி, நாகராஜாவுக்கு பாயாசம் படைக்கப்படும். பிரசன்னபூஜை முடிந்தபின் தீபாராதனை நடக்கும். மதியம் 12மணிவரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படும். 25 கலசங்களைக் கொண்டு தந்திரி மத்தியான பூஜை செய்வார். அரவணை பாயாசம் படைக்கப்பட்டு நடை சாத்தப்படும். மாலை 4மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு புஷ்பாபிஷேகம், தீபாராதனை நடக்கும். இரவு 10மணிக்கு நெய் அப்பமும், பானகமும் ஐயப்ப சுவாமிக்கு படைக்கப்படும். மீண்டும் கோயில் சுத்தம் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். இந்த சமயத்தில் ஐயப்பசுவாமி உறங்கச் செல்வதாக ஐதீகம். அப்போது உலகப்புகழ்பெற்ற பாடலான ஹரிவராசனம் பாடுவர். நெய்த் தேங்காயே நமது மனம்: இருமுடிக்கட்டில் இருக்கும் பொருள்களில் நெய்த்தேங்காய் முக்கியமானது. இந்த தேங்காயும், பக்தனின் மனமும் ஒன்று என்பது தான் இதன் தத்துவம். தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளிருக்கும் நீரை வெளியேற்றுவர். உலக ஆசைகள் ஒருவனுக்குத் தேவையில்லை என்று எண்ணி புறக்கணிப்பதைக் குறிக்கும். அத்தேங்காயில் நெய்யை ஊற்றுவது மனதில் தெய்வீக சிந்தனையை நிரப்ப வேண்டும் என்ற உண்மையைக் காட்டுகிறது. இந்த நெய்த்தேங்காயே சபரிமலை சந்நிதானத்தில் உடைக்கப்பட்டு சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும். இறையருளை நம்மோடு கொண்டு வருவதன் அடையாளமாக இதில் சிறிதளவு நெய்யை வீட்டிற்குக் கொண்டுவருவர். இதனை வெறும் சடங்காக மட்டும் செய்யாமல் உள்ளப்பூர்வமாகச் செய்தால் நெய்தேங்காயோடு நம் மனமும் ஐயப்பனுக்குரிய அருட்தேங்காயாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. பார்த்தாலும் பலன் உண்டு: ஐயப்பனுக்கு நடக்கும் பூஜைகளில் படிபூஜைக்கு சிறப்பிடம் உண்டு. இதற்கு நிலவிளக்கு, கற்பூரம், பத்தி, பூமாலை, பட்டுவஸ்திரம், தேங்காய், தந்திரி, மேல்சாந்தி, உதவியாளர்களுக்கு புது வஸ்திரங்கள் தர வேண்டும். நினைத்தது நினைத்தபடி நிறைவேற இப்பூஜையைப் செய்கின்றனர். அதிகச் செலவாகும் இப்பூஜையைப் பார்த்தவர்களுக்கும் நற்பலன் உண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பூஜை நடந்து வந்தது. தற்போது மண்டல பூஜை, மகரவிளக்கு காலம் தவிர, நடைதிறக்கப்படும் மாத பூஜை நாட்களில் நடத்தப்படுகிறது. ஐயப்பனின் முன்னோர் தமிழகத்தில் வாழ்ந்தனர். இவர்கள் செம்பழஞ்ஞி குடும்பத்தினர் என அழைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தான் இக்குடும்பம் வசித்து வந்தது. செல்வாக்கு மிக்க இக்குடும்பத்தை தஞ்சையை ஆண்ட சோழமன்னர்கள் புறக்கணித்ததோடு போரும் தொடுத்தனர். பகைமை விரும்பாத செம்பழஞ்ஞி குடும்பமும் தென்காசிப்பகுதியில் குடிபுகுந்தது. ஆனாலும், பகைமன்னர்கள் விட்டுவிடுவதாக இல்லை. மீண்டும் விரட்டினர். சிறிது காலத்திற்குப் பின், கேரளாவில் உள்ள கோந்தி என்னும் இடத்தில் குடியேறினர். அங்கேயும் சோழனின் நெருக்கடி தொடர்ந்தது. பாதுகாப்புக்காக பந்தளம் வந்து சேர்ந்தனர். பந்தளத்தில் இவர்களை பந்தளராஜா குடும்பத்தினர் என்று மக்கள் அழைத்தனர். அப்பெயர் இன்றும் ஐயப்பசுவாமிக்கு இருப்பதை அறியலாம். தங்கள் பகுதியான தென்காசி முதல் கோந்திவரையில் உள்ள பகுதியில் தங்களின் உரிமையை நிலைநாட்டிட விரும்பினர். இந்த சந்தர்ப்பத்தில் உதயணன் என்ற கொள்ளைக்காரனின் அட்டகாசமும் இப்பகுதியில் அதிகரித்து வந்தது. இந்த அடக்குமுறைக்கு முடிவுகட்டிட மணிகண்டன் அவதரித்தார். உதயணனை வென்றதோடு, கோட்டை கொத்தளங்களை அமைத்து பந்தளநாட்டைப் பலப்படுத்தினார். எரிமேலி முதல் சபரிமலை வரையிலுள்ள பகுதி இன்றும் ஐயப்பனின் சாம்ராஜ்ஜியமாகத் திகழ்கிறது. ஐயப்பனின் உதவியாளர்: ஐயப்பசுவாமியின் உதவியாளர்களில் வாபரைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். ஆனால், வெளுத்தச்சனைப் பற்றி ஒருவருக்கும் தெரிவதில்லை. ஆனால், ஐயப்பனுக்குரிய சரணத்தில் ஆர்த்துங்கல் பள்ளியே சரணம் ஐயப்பா என்றொரு வரி உண்டு. அது ஐயப்பனின் உதவியாளரான புனிதசெபஸ்பதியனைக் குறிக்கிறது. இவரை வெளுத்தச்சன் என்று ஐயப்ப வர்ணனைகளில் குறிப்பிடுவர். ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஆர்த்துங்கல்லில் இவருக்கு கோயில் உள்ளது. இப்பகுதி மக்கள் ஆர்த்துங்கல் சென்று காணிக்கை செலுத்திய பின்னரே, சபரிமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கோட்டைக்குள் ராஜா: சபரிமலை காடு முழுவதும் ஐயப்பனின் அருளாட்சி நடந்து வருகிறது. இப்பகுதியை ஐயப்பனின் பூங்காவனம் என்று குறிப்பிடுவர். எரிமேலியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள பேரூர்த்தோடு என்னும்   இடத்தில் இருந்து பூங்காவனம் ஆரம்பமாகிறது. இங்கிருந்து ஏழு கோட்டைகளைக் கடந்தால் தான் ஐயப்ப தரிசனம் கிட்டும். கோட்டபுறம், காளைகெட்டி, உடும்பாறமலை, கரிமலை, சபரிபீடம், சரம்குத்தி, திருப்படி என்பவையே அந்தக் கோட்டைகள்.
தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 2/24/2026 11:10:00 PM