|
காரடையான் நோன்பை பெண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். இதனால் மங்கல்ய பலம் பெருகும். மாசி மாதம் ஏகாதசியை ஒட்டு வரும் இதனை காமாட்சி நோமன்பு என்றும் கூறுவர். சாவித்திரி தனது கணவன் சத்தியவான் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இந்த நோன்பினை கடை பிடித்தாள்.
வெற்றியும் கண்டாள். காஞ்சி காமாட்சி கம்பா நதி தீரத்தில், ஈசனை மண்ணினால் லிங்கம் செய்து பூஜுத்தாள். அப்பொழுது பிரளயம் வந்தது. அந்த பிரளயத்திலிருந்து சிவலிங்கத்தைக் காப்பாற்ற இந்த விரதத்தைச் காமாட்சி மேற்கொண்டார். இந்த விரத் மகிமையால் ஈசன் அம்பாளுக்குத் தரிசனம் தந்து திருக்கல்யாணம் செய்து கொண்டார்.
காமாட்சி ஏகாம்பரேசுரர் திருக்கல்யாண வைபத்தால் இந்த விரதத்திற்குக் காமாட்சி விரதம் என்று பெயர். கலசம் ஒன்றில் தேங்காயுடன் மாவிலைகள் சந்தனம், குங்குமம், பூ ஆகியவற்றை வைத்து மஞ்சள் கயிற்றினைக் கலசத்தின் கழுத்தில் கட்டி விட வேண்டும்.
அதிகாலையில் எழுந்து குளித்து காரஅடை செய்து பழம், பொற் முதலானவற்றினைக் கலசத்தின் முன் வைத்து தீபாராதனை செய்து வழிபட வேண்டும். மாசிகயிறு பாசிபடியும் என்பது வழக்கு இப்பண்டிகையில் திருமாங்கல்ய சரடினை மாற்றிக் கொள்ள வேண்டும்.
காரஅடை, குங்குமம், மஞ்சள்,ரவிக்கைத்துண்டு ஆகியவற்றைச் சுமங்கலிப் பெண்களுக்குத்தர வேண்டும். மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். உபநயனம் செய்து கொள்வதும், நோன்புக் கயிறு அணிவதும் நன்மை தரும்.
|