|
பூஜை அறை
பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும். வடக்கு, கிழக்குத் திசைகளிலும் அமைக்கலாம். பூஜை அறையின் உட்கூரைபகுதி வீட்டின் உட்கூரை பகுதியைவிட தாழ்வாகயிருக்க வேண்டும். பூஜை அறையின் கதவை உச்சத்தில் அமைக்க வேண்டும். இந்த அறைக்கு இரட்டைக் கதவுகள்தான் போட வேண்டும். கதவுகளில் சிறுசிறு
துவாரங்களை அமைத்து அத்துவாரங்களில் மணிகளைத் தொங்கவிடும் போது மிகவும் சிறபான பலன்கள் உடாகும். சகல ஐஸ்வர்யங்களையும் அந்த மணியோசை வீட்டிற்கும் கொண்டுவரும். பூஜை அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்க வேண்டியது அவசியம். அப்படி ஜன்னல் அமைக்கும்போது அதன் வழியே சூரிய ஒளி பூஜை அறைக்கும்
வரும். இதனால் நன்மைகள் மேலோங்கும்.
பூஜை அறையின் வடகிழக்கு பகுதியில் அதிக பாரத்தை ஏற்றக் கூடாது. பூஜை அறைக்கும் மாடம் அமைக்கும் பட்சத்தில் அது வடகிழக்கு மூலையில் அமையக் கூடாது. பூஜை அறையின் மேற்குச் சுவரில் ஜன்னல் வைக்கக் கூடாது. இங்கு பூஜை சம்பந்தபட்ட பொருட்கள், விக்ரகங்கள்,படங்களைத் தவிர வேறு எதைம் வைக்கக் கூடாது. படுக்கை அறை,கழிவு அறை பக்கத்தில் பூஜை அறை அமையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடவுள் படங்களை மேற்கு அல்லது தெற்குச் சுவரில் மாட்ட வேண்டும். அபோதுதான் அவை முறையே கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியிருக்கும். சுவாமி படங்கள் மாட்ட
பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்த பொருளும் இருக்கக்கூடாது.
ஆஞ்ச நேயர் படத்தை தெற்கு திசை நோக்கி வைக்க வேண்டும். விளக்குகளை தெற்கு அல்லது வடக்கு நோக்கி வைக்கக் கூடாது. ஈசானியத்தில் பூஜை அறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக் கூடாது என்று ஒரு நியதி இருக்கிருறது. பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மலர்கள் போடும்போது அந்த கடவும்களின் முகமும் பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். |