| ஏகாது உப்புக்குங் காவிக்குந்தான் எழிலான செந்தூர மென்னசொல்வேன் போகாது புடத்துக்கு வுறுதிதங்கம் பொங்கமுடன் நாதாக்கள் உரைத்ததில்லை சாகாமல் இருந்திடலாம் செந்தூரத்தால் சதாகாலங் கற்பமது வுண்டுபாரு வேகாது தேகமது தீயிற்பட்டால் வெந்தாலும் மேனியது வினைகொள்ளாதே |