| போற்றுவாரின்னமொரு கருமானங்கேள் பொங்கமுடன் உந்தமக்குக் கூறுவேன்யான் ஆற்றலுடன் காலாங்கி நாதரோடு வன்புடனே வனஞ்சுத்தி வருகும்போது காற்றுடனே வனாந்திரங்கள் சுற்றும்போது கண்மணியே எந்தனுக்குக் களையுண்டாச்சு நீற்றலுடன் காலாங்கி யென்னைப்பார்த்து நீட்சியுடன் களைபோக நினைத்திட்டாரே |