| ஆச்சப்பா சமாதியிட பக்கல்சென்றேன் வப்பனே யங்கிருக்குஞ் சித்துதன்னை பாச்சலுடன் குளிகைவிட்டு யானுமல்லோ பண்புடனே சித்தரிடம் நின்றேன்யானும் வீச்சுடனே அங்கிருக்கும் காவல்சித்தர் வினயமுடன் எந்தனையும் யாரென்றார்கள் கூச்சலிட சித்துமுனி கூட்டத்தார்கள் கொப்பெனவே எந்தனுக்கு பயன்சொல்வாரே |