| கேட்குமே யுந்தனுக்கு யசரீரியப்பா கிருபையுள்ள ரேணுகையின் வார்த்தைதானும் நீட்கமுடன் சமாதிதனில் வார்த்தைதோன்றும் நெடிதான சப்தமதைக் காணலாகும் வேட்கையுடன் குருக்கள்மார் சித்தர்தாமும் விருப்பமுடன் அசரீரிகேட்ட பின்பு ஆட்கொள்ள வேண்டுமென்று போகர்தம்மை வன்புடனே வரங்கேட்க சொல்லிட்டாரே |