| சித்தனா மின்னமொரு மார்க்கம்பாரு சீரான என்மகனே சொல்லக்கேளு சுத்தமுடன் மச்சமென்ற முனிவர்தாமும் சொருபராமென்றொருவர் சித்துவுண்டு புத்தியுள்ள சித்தனப்பா மச்சர்தாமும் புகழாக சமாதிக்கு இடமுங்காண முத்தியுடன் பெறுவதற்கு காவனத்தைநோக்கி முயன்றுமே வராககிரி வந்திட்டாரே |